சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மா... கோலாலம்பூரில் மோடி உரை
கோலாலம்பூர்: மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் திரு உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தத்துவத்தை நமக்கு போதித்த சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளார். விவேகானந்தர் என்பது ஒருநபரின் பெயர் மட்டுமல்ல அது மக்களின் மனதில் ஒரு சக்தியாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. இன்று ஆசியான் மாநாடுகளில் பேசப்படும் 'ஒன்றுபட்ட ஆசியா' என்ற கொள்கையை விவேகானந்தர்தான் முதன்முதலில் வலியுறுத்தினார்.

வேதங்கள் தொடங்கி விவேகானந்தர்வரை இந்தியாவின் கலாச்சாரம் மிகவும் பழைமையானதாகவும், வளமானதாகவும், போற்றத்தக்கதாகவும் இருந்துவந்துள்ளது. இந்தியாவின் கல்லாச்சாரம் மற்றும் ஆன்மாவின் அடையாளமாக விவேகானந்தார் திகழந்து வந்தார். அவர் தனது ஆண்மீகப்பாதையை மேற்கொண்ட போது எந்த மதத்தையும், குருவையும் சாராமல் சத்தியத்துக்கான தேடலில் ஈடுபட்டார். நாம் யார் என்ற அடையாளத்தை நாம் தக்கவைத்துக் கொள்ள முன்வந்தால் விவேகானந்தரின் சிந்தனைகளை நமக்குள்ளும் வளர்த்துக் கொள்ளலாம்.
ஒருமுறை அவர் கொல்கத்தா நகருக்கு வந்திருந்தபோது, அவரிடம் சில இளைஞர்கள் ‘கடவுளை எப்படி பார்ப்பது?' என்று கேள்வி எழுப்பினார்கள். போய் கால்பந்து விளையாடுங்கள், நீங்கள் விளையாடும்போது முழு ஊக்கத்துடனும், உத்வேகத்துடனும் விளையாடினால் உங்களால் கடவுளை காண முடியும் என்று பதில் அளித்தார்.
மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் கடவுளைக் காண முடியும் என்று அவர் நம்பினார், இதனையே உலகிற்கும் போதித்தார். மனிதத்துக்கு ஆற்றும் தொண்டு தெய்வத்துக்கு ஆற்றும் தொண்டாகும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications