புதிய காலனியாதிக்கத்தை எதிர்க்க திராணியற்ற கோழைகளாக உலகத் தலைவர்கள்...: போப் ஆண்டவர் சாடல்
எல் அல்டோ: உலகில் புதியதாக உருவாகியுள்ள பல முகங்களைக் கொண்ட நவீன காலனியாதிக்கத்தை எதிர்க்க திராணியற்ற கோழைகளாக உலகத் தலைவர்கள் இருப்பதாக போப் ஆண்டவர் முதலாம் ஃப்ரான்சிஸ் சாடியுள்ளார்.
பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் பொலிவியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

தற்போதைய சமூக அமைப்பு முறையானது சகிக்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. தொழிலாளர்களும் விவசாயிகளும் சகிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
தற்போதைய புதிய காலனியாதிக்கம் பல முகங்களைக் கொண்டதாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், கடன் நிறுவனங்கள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற புதிய காலயனியாதிக்கத்துக்கு எதிராக ஏழை எளிய மக்கள் போராட வேண்டும். தகவல் தொடர்புத் துறையை ஏகபோகமாக்கிக் கொள்கிற போக்கு தற்போது உருவெடுத்து வருகிறது. இதை எதிர்த்து தற்போதைய தலைவர்கள் போராட துணிவற்ற கோழைகளாக இருக்கின்றனர்..
அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கு கடவுளின் பெயரால் கத்தோலிக்க சர்ச்சுகள் இழைத்த கொடுமைகளுக்காக பாவ செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது 3வது உலகப் போர்.
இவ்வாறு போப் ஆண்டவர் பேசினார்.
சர்ச்சை நினைவுப் பரிசு
பொலிவியா பயணத்தின் போது போப் ஆண்டவருக்கு பொலிவியா அதிபர் எவோ மோரலெஸ் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார். அந்த நினைவுப் பரிசு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது கம்யூனிச சின்னத்தைக் குறித்தும் அரிவாள் சுத்தியலில், சுத்தியல் பகுதியில் யேசு சிலுவையில் அறையப்பட்டிருப்பதாக அந்த நினைவுப் பரிசு அமைந்துள்ளது. ஏற்கெனவே கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை கம்யூனிச சித்தாந்தம் பேசும் லத்தீன் அமெரிக்கா நாடுகள் மேற்கொண்டிருக்கின்றன. தற்போதைய பொலிவிய அதிபரும் கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்..
தற்போது கம்யூனிச சின்னத்தில் யேசுவை சிலுவையில் அறைந்திருக்கும் நினைவுப் பரிசை போப் ஆண்டவருக்கு பொலிவியா அதிபர் கொடுத்திருப்பது சர்ச்சையாகி வருகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications