கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட போப் ஆண்டவர்!
வாடிகன்: கத்தோலிக்கர்களின் தலைவராக அறியப்படும் போப் பிரான்சிஸ் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
உலகில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி கத்தோலிக்க தலைநகர் வாடிகனில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், 84 வயதாகும் போப் பிரான்சிஸ் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்டார். இத்தகவலை வாடிகனும் உறுதி செய்துள்ளது.
அதேபோல முன்னாள் போப் ஆண்டவரான 93 வயதாகும் போப் பெனடிக்ட்டிற்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. வயது காரணமாக இருவரும் அதிக ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பதால், கொரோனா தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு என்ன கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டது, எப்போது தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த சில வாரங்களாகவே பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியிருந்தார்.
கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்வது ஒருவரது சொந்த விருப்பம் என்றாலும்கூட சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வாடிகன் நகரில் இதுவரை 27 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் அங்குத் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications