ஃபுகுஷிமா அணு உலை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை இல்லை!
ஜப்பானின் கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா அணுஉலைக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் ஃபுகுஷிமா அணுஉலை அருகே சந்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கிழக்கு இவாகியின் ஹான்ஷூவில் கடலுக்கு அடியில் 48 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.3ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடியான எந்தத் தகவலும் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு ஃபுகுஷிமா அணுஉலையை சக்தி வாய்ந்த அளவான 9 புள்ளியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அணுஉலை மிகுந்த பாதிப்பிற்கு ஆளானது. இதனால் கதிர்வீச்சு அபாயமும் இருந்தது. அதே போன்று இப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் பாதிப்பு இருக்குமா என்று மக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications