இன்னிக்கு தான் சம்பவமே இருக்கு! செஸ் ஃபைனலில் ‘நம்பர் 1’ கார்ல்செனுடன் மோதும் நம்ம ஊர் பிரக்ஞானந்தா!
பாகு: FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 3 வீரர் ஃபேபியானோ கருவானாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இன்று இறுதிப்போட்டியில் உலகின்'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் பிரக்ஞானந்தா மோதுகிறார்.
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா நேற்று நடைபெற்ற உலகின் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார்.

இதையடுத்து 4 டை பிரேக்கரின் முடிவில் 3.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார் பிரக்ஞானந்தா. இன்று நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள உள்ளார் பிரக்ஞானந்தா.
நேற்று நடைபெற்ற அரை இறுதியில் பேபியானோ கருவானாவை வெற்றி பெற்றதன் மூலம், புகழ்பெற்ற வீரர் விஸ்வநாதன் ஆனந்தைத் தொடர்ந்து போட்டியின் உச்சநிலை மோதலில் நுழைந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.
20 ஆண்டுகள் கழித்து செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் ஒருசேரப் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தா, "இந்தப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் உடன் விளையாடுவேன் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இறுதிப்போட்டியில் மட்டுமே அவரை சந்திக்கும் வகையில் போட்டி ஷெட்யூல் அமைந்திருந்தது. நான் இறுதிப் போட்டிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை... என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன்" என்று பணிவுடன் தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், ட்விட்டரில் பிரக்ஞானந்தாவை பாராட்டி, வாழ்த்தியுள்ளார். ஃபிடே உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் அடுத்த கேண்டிடேட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவும் இடம்பெறுவார். இந்த கேண்டிடேட் போட்டியில் வெற்றி பெறும் வீரர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்.
பிரக்ஞானந்தா இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) மோதுகிறார். இறுதிச்சுற்றும் இரு ஆட்டங்களை கொண்டது. இது சமன் ஆனால் டை பிரேக்கருக்கு செல்லும்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications