புடினுக்கு ரத்த புற்றுநோயா?.. உக்ரைன் போருக்கு முன் நடந்தது என்ன? விவரிக்கும் நெருங்கிய தொழிலதிபர்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என அதிபருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்த போர் அழிவால் உக்ரைனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஒரு நூற்றாண்டு ஆகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார்.
உக்ரைன் மீது போர் புரிய வேண்டாம் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்டவை கேட்டுக் கொண்டும் புடின் உக்ரைன் மீதான தனது ராணுவ நடவடிக்கைகளை திரும்ப பெறவில்லை.
தமிழ் கலாசாரத்தில் ஈர்க்கப்பட்ட ரஷ்ய தம்பதி... மயிலாடுத்துறை கோவில்களில் சாமி தரிசனம்
பொது இடங்கள்
அண்மைக்காலமாக பொது இடங்களில் தோன்றும் புடினின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன. உக்ரைன் மீதான போர் குறித்து ராணுவ அதிகாரியுடன் ஆலோசனை நடத்திய போது நாற்காலியின் இரு முனைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார் புடின்.
ரஷ்யா வெற்றி விழா
அது போல் ரஷ்யா வெற்றி விழா அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது கால்களை கம்பளியால் மூடியிருந்தார். முகத்தில் தெளிவு இல்லை, கவலை தோய்ந்து காணப்பட்டார். அப்போது கம்பீரமில்லாமல் அமர்ந்திருந்தார், கைகளை கட்டிக் கொண்டிருந்தார். எனவே புடின் ஏதோ நோய் வாய்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது.
Recommended Video
தகவல்கள்
ஆனால் இந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது அவருக்கு கேன்சர் அல்லது பார்கின்சன் நோய் இருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் புடின் குறித்து நாள்தோறும் ஒரு தகவல்கள் வருகின்றன. அதில் புடினுடன் பணியாற்றிய முன்னாள் உளவாளி ஒருவர் கூறுகையில் விளாடிமிர் புடினின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்கிறார்.
ரத்த புற்றுநோயா?
அதே வேளையில் புடினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் கூறுகையில் புடினுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்கிறார். அவர் ஏற்கெனவே ரத்த புற்றுநோய்க்காக அதாவது உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுவதற்கு முன்பே ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். புடினுக்கு என்ன நடக்கும் என தெரியவில்லை. ஆனால் உக்ரைன், ரஷ்யா பொருளாதாரங்களை அழித்துவிட்டார் என்கிறார் அந்த தொழிலதிபர்.