பிரிட்டனை தொடர்ந்து.. ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு கொடுக்க ரஷ்யா அதிரடி உத்தரவு
மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு கொடுக்குமாறு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிபிசர்- பயோன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது ரஷ்யா. இங்கு கொரோனாவால் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 41 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டார்கள்.

இங்கு தினமும் 589 பேர் கொரோனாவால் இறக்கிறார்கள். இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பு மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் முடிந்தன.
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக்- 5 ஐ பொதுமக்களுக்கு கொடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து புதின் கூறுகையில் கொரோனாவால் தினமும் ரஷ்யாவில் 500 பேர் உயிரிழக்கிறார்கள்.
எனவே அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு கொடுக்கவுள்ளோம். இதற்காக அடுத்த சில நாட்களில் 2 மில்லியன் தடுப்பு மருந்துகளை தயார் செய்யவுள்ளோம். ஸ்பூட்னிக் 5 தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக 92 சதவீதம் செயல்திறன் உள்ளது.
டிசம்பர் மாதம் முதல் யாரெல்லாம் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள முன் வருகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்படும் என்றார் புதின். ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை தயார் செய்யும் கிரெம்லின் நிறுவனம் முதலில் ரஷ்யர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். என்றும் மற்ற நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே பிபிசர்- பயோன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்த முதலில் அனுமதி வழங்கிய நாடு பிரிட்டன் ஆகும். இதற்கு அடுத்த ரஷ்யாவும் தற்போது பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தவுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications