சிகிச்சை அளித்த 600 டாக்டர்கள், நர்ஸ்களை குண்டு வீசிக் கொன்ற சிரிய படைகள்!
நியூயார்க் : சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசு படைகள் தாக்கியதில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலியாகி இருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் அரசு படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலின் போது, போரினால் மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களும், அவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் இயக்குனர் ஏரின் ஹல்கர் கூறும் போது "போரின் போது மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம். ஆனால் சிரியாவின் அரசுப்படைகள் எதைப்பற்றியும் கவலைபடாமல் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்ற செவிலியர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது" என தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது முதல் இன்று வரை சுமார் 15,000 மருத்துவர்களும், பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்களும் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தொடர்ந்து அங்கு வசித்து வரும் மருத்துவர்கள், நோயாளிகளைக் காப்பாற்ற சிகிச்சை அளிக்கும் போது கூட கொல்லப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications