ஸ்பெயினில் 5 நாட்கள் பிரமாண்டமாக நடந்த 'ஓரினச் சேர்க்கையாளர்' பேரணி
மாட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரமாண்டமான பேரணி விழா கோலாகலமாக நடைபெற்றது.
2005ம் ஆண்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரித்த நாடு ஸ்பெயின். நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தை அடுத்து ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரித்த நாடு ஸ்பெயின்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஆண்டுதோறும் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நடைபெறுவது வழக்கம்.

5 நாட்கள்
கடந்த புதன்கிழமை இரவு துவங்கிய இந்த கே(gay) திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

லட்சக்கணக்கானோர்
இந்த ஓரினச் சேர்க்கையாளர் திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஓரினச்சேர்க்கையாளர், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

பேரணி
மாட்ரிட்டின் கே(gay) மாவட்டமான சியூகாவில் கடந்த வியாழக்கிழமை பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் கலந்து கொண்ட ஆண்கள் ஹைஹீல்ஸ் அணிந்து தங்களை அலங்கரித்துக் கொண்டு சாலைகளில் நடந்து சென்றனர்.

ஐரோப்பா
ஐரோப்பாவின் மிகப் பெரிய ஓரனிச் சேர்க்கையாளர் பேரணி என்றால் அது ஸ்பெயினில் நடப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications