ரஷ்யாவில் மீண்டும் ருத்ர தாண்டவமாடும் கொரோனா- இன்று 25,142 பேருக்கு பாதிப்பு- 663 பேர் மரணம்
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ரதாண்டவமாடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மாஸ்கோவில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது.

ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 25,142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரஷ்யாவின் மொத்த கொரோனா பாதிப்பு 5,610,941 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரஷ்யாவில் இதுதான் அதிகபட்சமான கொரோனா பாதிப்பாகும்.
ரஷ்யாவில் இன்று ஒரேநாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 137,925.
உலக அளவில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா, ரஷ்யாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிV பயன்பாட்டில் உள்ளது.












Click it and Unblock the Notifications