உக்ரைனில் ரஷ்ய பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை... உயிர் பிரியும் நேரத்திலும் தாக்குதல் பதிவு
மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிர் பிரியும் அந்த தருணத்திலும் தாக்குதலை அந்த பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்துள்ளார்.
உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராணுவ வீரர்களின் தாயார்களை ஒரு பேருந்தில் கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். முகாமில் உள்ள தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது.
அதில் பத்திரிக்கையாளர்களும் செய்தி சேகரிப்பதற்காக பயணித்தனர். அவர்களில் ஒருவராக அனடோலி(68)யும் இடம் பெற்றிருந்தார். இவர் ரஷ்ய தொலைக்காட்சி சேனலான ‘சேனல் ஒன்'ல் கடந்த 40 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர்.
பேருந்து டொனெட்ஸ்க் பகுதிக்கு அருகே உள்ள அவ்டிவ்கா என்ற இடத்தைக் கடந்த போது திடீரென பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில், அனடோலியின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ஆனபோதும் தொடர்ந்து தாக்குதலைப் படமாக்கியிருக்கிறார் அவர். ஒளிப்பதிவின் இடையே, ‘என்னால் இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இந்தக் கேமராவைத் தாங்கிப் பிடிக்க இயலும் என தெரியவில்லை' என அனடோலி வலியோடு கூறுவதும் பதிவாகியுள்ளது.
உடனடியாக மற்றொரு பத்திரிக்கையாளரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அனடோலி. ஆனால், மருத்துவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.
கடந்த ஏப்ரலில் உக்ரைன் அரசுப் படையினருக்கும், ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட மோதலுக்குப் பின்னர் கொல்லப்பட்டுள்ள 5வது பத்திரிக்கையாளர் அனடோலி என்பது குறிப்பிடத்தக்கது
இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமே காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது உக்ரைனைக் கோரியுள்ளது.
இந்தப் பயணத்திற்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் ஏற்பாடு செய்திருந்ததாக சேனல் ஒன் செய்தி தெரிவிக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications