"சந்தோஷ் நாராயணன்" சர்ச்சை: இந்திய அமைதிப்படை தாக்குதலில் பலியானோருக்கு யாழ். இசை நிகழ்வில் அஞ்சலி!
யாழ்ப்பாணம்: தமிழ் சினிமா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையாக வெடித்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மனைவி இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அண்மையில் மனைவியுடன் இலங்கை சென்ற சந்தோஷ் நாராயணன் 'இசை நிகழ்ச்சி'க்காக ஏற்பாடுகளை மேற்கொண்டார். ஆனால் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படும் நாள் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 1987 -ம் ஆண்டு அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் இந்திய அமைதிப்படை நடத்திய தாக்குதலில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவு கூறுவதை திசை மாற்றவே இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர்.

இதனிடையே திட்டமிட்டபடி சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கலையும் கலாச்சாரமும் சிறந்து ஓங்கும் இந்த யாழ் மண்ணில் யாழ்கானம் என்ற இந்த இசை நிகழ்ச்சியை அளிப்பதில் சந்தோஷ் நாராயணனும் அவர் குழுவினரும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். இம்மண்ணும் இம்மண்ணில் வாழும் மக்களும் கண்ட துயர்கள் அநேகம். ஒரு வருடத்தின் 365 நாட்களில் எந்த திகதியையும் எடுத்து வரலாற்று ஏடுகளைப் பின்னோக்கி புரட்டினாலும் அத்திகதியில் ஒரு கொடூர சம்பவம் ஒரு துயர்மிகு சம்பவம் நிகழ்ந்திருக்கும். பல தசாப்தங்களாக நடந்த கொடிய யுத்தத்தில் மறைந்த எம் நாட்டு மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு இம்மருந்தை அருந்துவதே பொருத்தமானதாய் இருக்கும். இயலுமானவர்கள் எல்லோரும் எழுந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறோம் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அமைதிப் படை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தங்களது இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்ததால் இந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பது விவாதப் பொருளாகவும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது சமூக வலைதளங்களில்!.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications