Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு?
ரியாத்: ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. ஈரான் தனது யுக்தியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு 'மிக முக்கியமான திறன்களும் சக்திகளும்' சவுதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் உள்ளன என்றும் எச்சரித்ததுள்ளது.
ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி இந்த போரில் கொல்லப்பட்டார்.

பொறுமைக்கும் எல்லை உண்டு
இதனால், கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் கடுமையாக தாக்கி வருகிறது. ஏவுகணைகள், கிளஸ்டர் குண்டுகளை வீசி ஈரான் தக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கி ஈரான் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்க முயன்றதாகவும் இவற்றை ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் இடை மறித்து அழித்ததாகவும் சவுதி அரேபியா கூறிய நிலையில், தங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று ஈரானை எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியா குற்றச்சாடு
இது தொடர்பாக சவுதி கூறுகையில், சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகளின் பொறுமைக்கும் ஓர் அளவு உள்ளது. இந்த தாக்குதல்கள் வெளிப்படையான மிரட்டல் முயற்சியாகும் என்று சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. மேலும், ஈரான் தனது யுக்தியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு 'மிக முக்கியமான திறன்களும் சக்திகளும்' சவுதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் உள்ளன என்றும் எச்சரித்ததுள்ளது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications