சவுதியில் ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
#تفجير_مسجد_محاسن
لحظة الانفجار pic.twitter.com/0XuxMTZPJC
— malek4 (@malek4843) January 29, 2016
ரியாத்: சவுதியின் அல் ஹஸா நகரில் இருக்கும் ஷியா மசூதியில் இன்று மதியம் குண்டு வெடித்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவின் கிழக்கு பதியில் உள்ள அல் ஹஸா நகரில் இருக்கும் ஷியா பிரிவு மசூதிக்கு இன்று மதியம் ஜும்மா தொழுகையில் பங்கேற்க பலர் வந்துள்ளனர். அப்போது மசூதியில் குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.
#تفجير_الأحساء
الارهاربي الذي لم ينفجر الحزام الناسف معه تم القبض عليه pic.twitter.com/bZOeI3FBtF
— malek4 (@malek4843) January 29, 2016
இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பிறகு மஹாசென் நகரில் உள்ள இமாம் ரிதா மசூதியில் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
Explosion in #Saudi al Ahsa city inside a mosque , causality reported pic.twitter.com/lMtygPwMgm
— Nasser Atta (@nasseratta5) January 29, 2016
துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மசூதியில் குண்டு வெடித்தது, துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பான வீடியோக்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை மதியம் ஜும்மா தொழுகையின் போது நடந்த தாக்குதல்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.