9,00,000 லிட்டர் டீசலுடன் மலேசிய கப்பல் கடத்தல்.. இந்தோனேஷிய கடற்பகுதியில் நிற்பதாக தகவல்
கோலாலம்பூர்: மலேசியாவில் 9,00,000 லிட்டர் டீசலை எடுத்துச் சென்ற கப்பல் கடத்தப்பட்டதாக அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை மலேசியாவின் தஞ்சோங் பெலிபாஸ் துறைமுகத்தில் வீர் ஹர்மோனி கப்பல் நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 900,000 லிட்டர் டீசல் கொண்ட ஆயில் டேங்கர் அந்த கப்பலில் இருந்துள்ளது. இதனிடையே கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கூறியிருப்பதாவது:
மலேசியாவின் தஞ்சோங் பெலிபாஸ் துறைமுகத்தில் 900,000 லிட்டர் டீசலை சுமந்துசென்ற கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலானது இந்தோனேஷியாவில் உள்ள பாதாம் கடற்பகுதியில் நிற்கிறது.
கப்பலில் இருந்த டீசலின் மதிப்பு சுமார் ரூ.2.62 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலை கடத்தியவர்கள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications