224 பேருடன் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம் நடுவானிலேயே உடைந்து விழுந்தது - விசாரணையாளர்கள்
கெய்ரோ: எகிப்தில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம் நடுவானில் இரண்டாக உடைந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த கோகலிமாவியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 217 பயணிகள், 7 விமான ஊழியர்களுடன் எகிப்தில் உள்ள சினாய் செங்கடல் கடற்கரை நகரமான ஷரம் எல் ஷேக்கில் இருந்து ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சனிக்கிழமை கிளம்பியது.
விமானம் கிளம்பிய 20 நிமிடத்தில் சினாயில் உள்ள நெகேல் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியாகினர். இந்நிலையில் விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை துவங்கியுள்ளது.

நடுவானில்
ரஷ்ய விமானம் நடுவானில் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு பாகம் எரிந்து நாசமாகியுள்ளது. மறுபாகம் பாறை மீது மோதியுள்ளது. விமான பாகங்கள் ஒரு இடத்தில் அல்லாமல் 8 சதுர மைல் தூர பரப்பில் சிதறிக் கிடந்தது என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானம்
விபத்துக்குள்ளான ஏர்பஸ் விமானம் ஏ 321 18 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது. 21 ஆயிரம் முறை பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. நல்ல நிலையில் இருந்த விமானத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் இரண்டாக உடைந்ததற்கு அதன் வடிவமைப்பில் நிச்சயம் ஏதோ பெரிய கோளாறு இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகள்
விமானம் உடைந்து விழுந்துள்ளதை பார்க்கையில் அது ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதன் மூலம் தாங்கள் தான் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு விபத்து
தற்போது விபத்துக்குள்ளான விமானம் முன்னதாக கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி கெய்ரோ விமான நிலையத்தில் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானத்தின் வால் பகுதி தரையில் பலமாக மோதி பலத்த சேதம் அடைந்தது. அதன் பிறகு விமானம் ரிப்பேர் செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

வால் பகுதி
தற்போது விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடத்தில் இருந்து 3 மைல் தொலைவில் தனியாக வால் பகுதி கிடந்ததாக ரஷ்ய தொலைக்காட்சி நிருபர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வால் பகுதி தனியாக உடைந்து சென்றது தெரிய வந்துள்ளது.

மாட்டோமே
ரஷ்ய விமானத்தை சினாய் மாகாணத்தில் உள்ள தீவிரவாதிகள் தாக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் லுப்தான்சா, ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் சினாய் வழியாக இனி விமானங்களை இயக்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications