ஜப்பானில் பிரதமர் மோடி.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் பரபரப்பு.. அதிர்ந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க
டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஒரு கூட்ட அரங்கில் உரையாற்றி முடித்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இந்தியர்கள் வந்தே மாதரம் என்றும், ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கோஷமிட்டனர்.
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் இன்று முதல் இரண்டு நாள்கள் நடக்கும் 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.
அங்கு மாநாட்டில் பங்கேற்கும் முன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானின் கோபே நகரில் உள்ள ஹையோகோ பிரிகெக்சர் கூட்ட அரங்கில் இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
#WATCH Japan: Slogans of 'Vande Mataram', 'Jai Sri Ram' raised at community event at the Hyogo Prefecture Guest House, in Kobe after the conclusion of PM Narendra Modi's address. pic.twitter.com/E5C2kAtpWL
— ANI (@ANI) June 27, 2019
பிரதமர் மோடி உரையாற்றி முடித்த பின்னர் அங்கு கூட்ட அரங்கில் இருந்த இந்தியர்கள் நரேந்திர மோடிக்கு வாழ்க கோஷம் போட்டனர்.
அத்துடன் வந்தே மாதரம் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இறுதியாக ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷங்கள் எழுப்பி கூட்டத்தை நிறைவு செய்தார்கள். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.