எபோலா போய் வந்தது ”மெர்ஸ்”- தென்கொரியாவில் படுதீவிரமாக பரவும் நோய்!
சியோல்: சவுதிஅரேபியா நாட்டில் சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 20 ஆம் தேதி தென் கொரியா திரும்பிய 60 வயது நபரை மெர்ஸ் நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் மூலம் அந்நாட்டில் உள்ள பல்வேறு நபர்களுக்கும் இந்நோய் பரவியுள்ளது. இதில் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேரை இந்நோய் நேரிடையாக தாக்கியுள்ளது.

மேலும் 1300 பேரை இந்நோய் தாக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக தனி வார்டில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்நாடு முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேகமாக பரவும் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டும் நேற்று 209 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
தற்போது மேலும் 491 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தலைநகர் சியோலில் முக கவசம் அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சவுதி அரேபியா நாட்டு மக்களை மர்ம நோய் ஒன்று தாக்கியது. அது புதுவகை கிருமியால் உருவாகியிருந்தது.
இந்த நோய்க்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டது. அந்நாட்டில் இந்நோய் தாக்கிய பலர் உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்து மெர்ஸ் நோய் மற்ற நாடுகளிலும் பரவியதால் உலகம் முழுவதும் இதுவரை 1161 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.
இதில் 436 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications