இலங்கையில் உளவு கப்பல்- எந்த நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை- பிற நாடுகள் தலையிட கூடாது: சீனா வார்னிங்
பெய்ஜிங்: இலங்கையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள தங்களது நாட்டின் யுவான் வாங்-5 கப்பலால் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை; இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடவும் கூடாது என சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
Recommended Video
சீனாவின் யுவான் வாங்- 5 என்பது செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பல். ஆகையால் ரேடார் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன கருவிகளுடன் இந்த கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ளது என்பது இலங்கை, சீனாவின் கருத்து.
ஆனால் யுவான் வாங்-5 என்கிற சீனாவின் கப்பலானது, உளவு கப்பலாகும். இந்தியாவின் தென் எல்லை தொடங்குகிற தமிழ்நாட்டில் இருந்து 150 கி.மீ தொலைவில் தான் அம்பாந்தோட்டா துறைமுகம் உள்ளது. சீனாவின் உளவு கப்பலானது சுமார் 750 கி.மீ தொலைவு வரை உளவு பார்க்கக் கூடியது. அதற்கான நவீன கருவிகள்தான் இந்த உளவு கப்பலில் இருக்கிறது என்பது இந்தியாவின் கருத்து.

சீனாவின் உளவு கப்பலானது தென்னிந்தியாவில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எளிதாக கண்காணிக்க முடியும்; குறிப்பாக ஒடிஷாவின் ஏவுகணை தளம், தமிழகத்தின் அணுமின் நிலையங்கள் உள்ளிட்டவைகளை சீனாவால் இந்த கப்பலில் இருந்து உளவு பார்க்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனால்தான் சீனாவின் யுவான்வாங்-5 கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்கவே கூடாது என்றது இந்தியா.
இருந்தபோதும் சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. தற்போது இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் யுவான்வாங்-5 உளவு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், யுவான் வாங்-5 ஆய்வுக் கப்பலின் கடல் ஆய்வு நிகழ்ச்சி சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டதுதான். அதே நேரத்தில் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனையும் யுவான் வாங்-5 கப்பலின் பயணம் பாதிக்காது. அத்துடன், பிற நாடுகள் இந்நிகழ்ச்சியில் தலையிடக்கூடாது என்றார்.
இலங்கைக்கான சீனாவின் தூதர் ஷி ஜென்ஹாங் கூறுகையில், இத்தகைய ஆய்வு கப்பல்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது இயல்பானதுதான். 2014-ம் ஆண்டிலும் கூட இத்தகைய கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வுக் கப்பலை அனுப்பி வைத்திருப்பதில் எந்த உள்நோக்கம், சதி இல்லை என்றார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications