Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க- 40% வாக்குகள் பெற்ற சஜித் பிரேமதாச!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாதி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க (அநுர குமார திஸாநாயக்க) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார திசநாயக்கதான் இலங்கையின் புதிய ஜனாதிபதியாகி இருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக 7 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் எனும் அரியநேத்திரனை களமிறக்கின. ஆனால் அரியநேந்திரனின் தமிழரசுக் கட்சியே அவரைக் கைவிட்டது. தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை ஆதரித்தது.

sri lanka presidential election 2024 sri lanka election

இலங்கையில் நேற்று முன்தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் இரவே எண்ணப்பட்டு அதிகாலை 12 மணி முதல் முடிவுகள் வெளியாகின. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல மணிநேரமாக ஜேவிபி தலைவரான அனுர குமார திசநாயக்கதான் 50%-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு மாகாண வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான போது இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

முன்னணியில் இருந்த அனுர குமார திசநாயக்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையேயான வாக்கு சதவீதம் வெகுவாகவே குறைந்தது. இதனால் அனுர குமார திசநாயக்கவால் 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாமல் போனது. இதனையடுத்து இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2-வது விருப்பு வாக்குகள் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அனுர குமார திசநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இருந்த போதும், இலங்கை தமிழரின் (ஈழத் தமிழரின்) தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுர குமார திசநாயக்கவுக்கு சொற்பமான வாக்குகள்தான் கிடைத்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% வாக்குகள் கிடைத்தன. தமிழரசு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஈழத் தமிழர்கள், சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருக்கின்றனர். ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அரியநேந்திரனும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஒட்டுமொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்திருக்கும்; அனுர குமார திசநாயக்கவின் வெற்றியும் கேள்விக்குறியாகி இருக்கும்.

இப்போதும் இலங்கை தேசம் இரண்டாகத்தான் பிளவுபட்டு நிற்கிறது. சிங்களர் தரப்பு, அனுர குமார திசநாயக்கவையும் தமிழர் தரப்பு சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்கிறது. அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க என்பது விசித்திரமானதுதான்.

அனுர குமார திசநாயக்க, ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாத கட்சியின் தலைவர். இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனையையே நிராகரிப்பவர். இலங்கையில் ஒற்றையாட்சிதான் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவர். ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, ஜனாதிபதியாக இருக்கும் நாட்டில் ஈழத் தமிழருக்கு கிஞ்சித்தும் அதிகாரம் கிடைக்காது; கடந்த கால இன அழித்தொழிப்பு நடவடிக்கைகள் தலைதூக்காமல் இருந்தாலே போதும் என்கிற அச்சம் ஈழத் தமிழரிடத்தில் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+