தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- 12 விடுதலைப் புலிகள் விடுதலை: சுவிஸ் நீதிமன்றம்
பேர்ன்: தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும் அது குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 12 விடுதலைப் புலிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீண்டகாலம் நடைபெற்றது.

இதில் 2018-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த லுவுசான் மேல்முறையீட்டு நீதிமன்றம், விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினாலும் தங்களது இயக்கத்தின் அங்கீகாரத்துக்கான போராட்டம் அது. ஆகையால் குற்ற அமைப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்ததது.
இத்தீர்ப்பு விவரம், நீதிமன்றத்தின் அறிக்கையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரில் 12 விடுதலைப் புலிகளையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சுவிஸ் தூதரக ஊழியர் வெளிநாடு செல்ல இலங்கை நீதிமன்றம் தடை
இதனிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் கடந்த மாதம் 25-ந் தேதி கடத்தப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பாஸ்கேல், ஊழியர் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணைகளை இலங்கை அரசு தாமதப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மர்ம நபர்களால் கடத்தி விடுவிக்கப்பட்ட பெண் ஊழியர் விசாரணை செய்வதற்கான மனநிலைக்கு இன்னமும் திரும்பவில்லை எனவும் சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதர் கருணாசேக ஹெட்டியராச்சியும் சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக சுவிஸ் தூதரக பெண் ஊழியர் விளக்கம் தர வேண்டும் என்றும் டிசம்பர் 9-ந் தேதி வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிப்பதாகவும் கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்த சிஐடி போலீஸ் அதிகாரி நிசாந்த சில்வா, இலங்கையைவிட்டு தப்பி சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications