ஆளில்லா டிரோன்களை பறக்கவிட்ட சீனா.. வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தைவான்!
தைபே: தங்களது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் ஆளில்லா டிரோன்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தைவான் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டை ஆக்கிரமிப்பதில் சீனா பெரும் முனைப்பாக இருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது.
ஆனால் தைவானோ, நாங்களே உண்மையான சீனா; எங்கள் நாடு தனிநாடுதான் என்பதில் உறுதியாக உள்ளது. சீனா, தைவான் விவகாரத்தில் உலக நாடுகள் குழப்பமான நிலையில்தான் உள்ளன. இந்த நிலையில் தைவானுக்கு அமெரிக்கா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. அந்நாட்டின் பிரதிநிதி நான்சி பெலோசி அண்மையில் தைவான் சென்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
நான்சி பெலோசியின் தைவான் பயணத்துக்குப் பின்னர் அந்த பிராந்தியத்தில் சீனா தமது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக தைவான் ஜலசந்தியை சூழ்ந்து சீனா அதி தீவிரமாக போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு எதிராக, அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் தைவான் ஜலசந்தியில் முகாமிட்டதால் அதி உச்சமான போர் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் தைவானுக்குள் வழக்கம் போல சீனாவின் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி பறந்தன. தைவானின் தீவுகளுக்குள் சீனாவின் டிரோன்கள் பறந்தன. இதனையடுத்து சீனாவின் டிரோன்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் வானை நோக்கி தைவான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து சீனா பிராந்தியத்துக்குள் டிரோன்கள் திசைமாறி சென்றன. அதேநேரத்தில் சீனாவின் டிரோன் ஒன்றை தைவான் சுட்டுவீழ்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தைவானின் இந்த பதிலடி தாக்குதலானது சீனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தும் அந்த தேசத்தை ஆக்கிரமித்துவிட முடியவில்லை. உக்ரைன் மீதான போரின் உந்துதலால் தைவானை கபளீகரம் செய்ய சீனா முயன்று வருகிறது. இந்த நிலையில் தைவானின் பதிலடி நடவடிக்கை சீனாவுக்கு அதிர்ச்சி தரக் கூடியதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அமெரிக்கா தங்கள் பக்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில்தான் தைவான் இத்தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications