பாகிஸ்தான் கராச்சி ராணுவ அகாடமியில் தீவிரவாதிகள் தாக்குதல்
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகேயுள்ள ராணுவ அகாடமி மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்து 28 பேர் கொல்லப்பட்டு 48 மணி நேரமே ஆன நிலையில் அடுத்ததாக இத்தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள் நேற்றுமுன்தினம் இரவு நுழைந்த 10 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படைவீரர்களின் பதில் தாக்குதலில் 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து 28 பேர் உயிரிழந்த நிலையில் ஏர்போர்ட்டை ஒட்டிய விமானப்படை பாதுகாப்பு அகாடமியில் இன்று மதியம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சுமார் 10 தீவிரவாதிகள் இங்கு ஊருடுவி துப்பாக்கிச்சூடு நடத்திவருவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டு பதில் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இதையடுத்து கராச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தாக்குதல்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே கராச்சி விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக்கொண்ட தரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications