பொதுமன்னிப்பு கொடுத்துவிட்டோம்... அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பலாம்... கூவி அழைக்கும் தாலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டுவிட்டதால் அனைவரும் பணிக்கு திரும்பலாம் என தலிபான்கள் (தாலிபான்கள், தாலிபன்கள்) அறிவித்துள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே குறுகிய காலத்துக்குள் மிகப் பெரிய யுத்தங்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட்டனர் தாலிபான்கள். தாலிபான்கள் இஸ்லாமிய மத கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றக் கூடியவர்கள்.
தாலிபான்கள் கடந்த கால ஆட்சியில் மிக கடுமையான ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமான உடன் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து அந்த நாட்டை விட்டு தப்ப முயற்சிக்கின்றனர்.

இந்திய தூதரகம் மூடல்
உலக நாடுகள் பெரும்பாலும் தங்களது தூதரகங்களை ஆப்கானிஸ்தானில் மூடிவிட்டன. இந்திய தூதரகமும் மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக நாடு திரும்பிவிட்டனர். ஆனால் ஆப்கான் பொதுமக்கள் நிலைமைதான் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.

காபூல் துயரம்
ஆப்கான் மக்களுக்கு இருக்கும் ஒரே வெளியேறும் பாதை என்பது விமான நிலையம்தான். அந்த விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குவிந்திருக்கின்றனர். ஆனால் காபூல் விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது உலக நாடுகளின் ராணுவ விமானங்கள் மட்டுமே மீட்பு பணிக்காக காபூலில் தரை இறங்குகின்றன.
Recommended Video

இடம்பிடிக்க போராட்டம்
இந்த விமானங்களில் எப்படியாவது இடம்பிடித்து ஏறி ஆப்கானை விட்டு தப்பித்தால் போதும் என அந்த தேசத்து மக்கள் படும்பாடு பெரும் துயரைத்தருகின்றன. காபூல் விமான நிலைய வீடியோ காட்சிகள், அந்த அப்பாவிகளின் அவலத்தை மட்டுமல்ல உலகின் மனசாட்சிகளையும் உலுக்கி எடுத்து வருகின்றன.

அரசு ஊழியருக்கு பொதுமன்னிப்பு
இந்நிலையில் ஆப்கானில் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுத்துவிட்டோம்; அவர்கள் அச்சமின்றி பணிக்கு திரும்பலாம் என அழைப்பு விடுத்துள்ளனர் தாலிபான்கள். தாலிபான்கள் புதிய அரசு எப்படி அமையும்? எப்போது அமையும்? என்பது தெரியாத நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பேரச்சத்தில் உறைந்து கிடக்கிறது அந்த தேசம்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications