Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடங்கிய பதற்றம்.. 25 நாட்களுக்குப் பின்.. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் டோர்காம் எல்லை மீண்டும் திறப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ராணுவ சோதனைச் சாவடி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையிலும் கடும் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், இப்பிரச்சனை தொர்பாக இரு தரப்பு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 25 நாட்களுக்குப் பிறகு டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது டோர்காம் வழித்தடம். இந்த இரு நாடுகளையும் மக்கள் கடப்பதற்கான மிக முக்கியமான வழித்தடமாக டோர்காம் உள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வழியை தினந்தோறும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பகுதி என்பதால் இது முக்கிய வர்த்தகப் பகுதியாகவும் உள்ளது.

Pakistan Afghanistan Border Torkham border

டோர்காம் வழித்தடத்தில் கிட்டத்தட்ட நாள்தோறும் 25 கோடி ரூபாய்க்கும் மேலாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் முக்கிய வழித்தடப் பகுதியில் ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைக்க முயற்சித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தங்களுடைய நாட்டின் பகுதியை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, டோர்காம் எல்லையை பாகிஸ்தான் அரசாங்கம் மூட உத்தரவிட்டது. இதநால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானம் ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால் இரு நாடுகளின் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் டோர்காம் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 25 நாட்களுக்குப் பின்னர் டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

முக்கிய வர்த்தகப் பகுதியான டோர்காம் எல்லை மற்றும் இரு நாடுகளின் முக்கிய வழித்தடப் பகுதி திறக்கப்பட்டுள்ளதால் இரு நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+