பள்ளி மாணவனுடன் உறவு கொண்டு கர்ப்பமாகி கருவைக் கலைத்த ஆசிரியை!
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் 8-ஆம் வகுப்பு மாணவருடன் உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பமாகி கருவை கலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டொவல்லா பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வநதவர் அலெக்சாண்டிரியா வேரா (24). அவரது வகுப்பில் 8-ம் வகுப்பு பயின்று வந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை அந்த மாணவருடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கர்ப்பமானார். பின்னர் கருவைக் கலைத்துள்ளார்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெக்சாஸ் மாகாண போலீசார் அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கில் சிக்கிய அலெக்சாண்டிரியா போலீசில் சரணடைந்து உள்ளார்.
அலெக்சாண்டிரியா வேரா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கூட செய்தி தொடர்பாளர் கூறும் போது, கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து அலெக்சாண்டிரியா வேரா பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications