விரைவில் கைதாவான் தாதா தாவூத் இப்ராஹிம்.. சொடக்குப்போட்டு சொல்லும் போலீஸ்!
இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்னின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர்
லண்டன்: இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்னின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் 1993ஆம் ஆண்டில் நடந்த முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய காரணகர்த்தாவான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய அரசு தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

தாவூத் இப்ராஹிம் துபாயில் தாய்மறைவாக வாழ்ந்து வருவதாகவும் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் பல பெரிய நிகழ்வுகளை செய்துவருகிறார் என்றும் தகவல்கள் வருகிறது. ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற குற்றங்களை நடத்தி வருகிறார்.
அதேபோல்,இந்தியாவை அழிக்கும் எண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பதாகவும் தாவூத் இப்ராகிம் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர்களை எல்லா விதத்திலும் தாவூத் இப்ராகிம் ஆதரித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் இன்றும் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டி என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் போலீசார் கைது செய்துள்ளனர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜபிர் மோட்டி பத்து வருடங்களாக பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
தாவூத் இப்ராகிம் மட்டுமல்ல அவனது குடும்பத்தினர் அனைவருக்குமே வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டி கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜபிர் மோட்டியிடம் லண்டன் போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் எல்லா சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றியும் பல உண்மைகள், ரகசியங்கள் வெளிவரும் என கருதப்படுகிறது. இதனால் தாவூத் விரைவில் கைதாவான் என்று போலீசார் கூறியுள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications