இரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள்... கிராமமே மூழ்கும் அபாயம்... மக்கள் பீதி
கிரீன்லாந்து நாட்டில் இரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள் இருப்பதால் கிராமமே மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
டென்மார்க்: கிரீன்லாந்து நாட்டில் இரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள் குவிந்திருப்பதால் கிராமமே மூழ்கும் அபாயம் உள்ளது.
கிரீன்லாந்தில் உள்ளது சிறிய கிராமமான இன்னார்சூட் கிராமம். இங்கு 169 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மீனவர் கிராமமான இங்கு 650 அடி அகலமுள்ள பனிப்பாறை ஒன்று உள்ளது.
கடல் மட்டத்தை காட்டிலும் 300 அடி உயரத்தில் உள்ளது. இதன் நீளமோ இரு கால்பந்து மைதானம் அளவுக்கு இருக்கிறது.

அச்சம்
இந்த பனிப்பாறையை சுற்றியுள்ள இன்னார்சூட் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு வேளை பலத்த காற்று வீசினால் தற்போதுள்ள இடத்தை விட்டு அந்த பனிப்பாறை சரியும். இது பஃப்பின் பேவுக்குள் சென்று மிதக்கும் நிலை ஏற்படும். இதனால் ஆபத்தில்லை.

நிலை குலையும்
ஆனால் மழை பெய்துவிட்டால் அந்த பனிப்பாறை நிலை குலைந்து அது கடலுக்குள் கலக்கும். பிறகு சுனாமி ஏற்பட்டு அந்த கிராமத்தை அடித்து செல்லும் நிலை ஏற்படும்.

நிலநடுக்கம்
இதனால் அச்சமடைந்து 33 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். பனிப்பாறையை சுற்றி விடப்பட்ட படகுகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன. கடந்த ஜூனில் நூக்காட்சியாக் கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

4 பேர் கொலை
இது ரிக்டர் அளவுக்கோலில் 4.1-ஆக பதிவானது. இதனால் நில சரிவு ஏற்பட்டு 11 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்னார்சூட் கிராமத்தின் தலைவிதி, வானிலை மாற்றத்தின் கையில்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications