Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கடலில் அடக்கப்பட்ட ஹவுதி படை ஆதிக்கம்! "2 தட்டு தட்டி" கொடி பறக்கவிட்ட அமெரிக்கா.. தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், செங்கடலில் பயணித்த சிங்கப்பூர் கப்பலை கடத்த முயன்றபோது அதை அமெரிக்க கடற்படை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது.

பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

The US has successfully repelled an attack by Houthi rebels in the Red Sea

இந்த போரை நிறுத்தக்கோரி அரபு நாடுகள் ஐநா சபையில் தொடர்ந்து சில தீர்மானங்களை கொண்டு வந்தன. ஆரம்பத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகள் தோற்கடித்தன. ஆனால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. ஆனால், ஐநா தீர்மானங்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எந்த நாடுகளுக்கும் கட்டாயம் கிடையாது. எனவே இஸ்ரேல், பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தவில்லை.

எனவே ரஷ்யா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பொதுச்சபை போல, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட முடியாது. ஒரு முறை இங்கு தீர்மானம் நிறைவேற்றிவிட்டால், அதை அமல்படுத்த வேண்டும். எனவே ரஷ்யாவும், சீனாவும் கொண்டுவரும் மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானங்களை அமெரிக்கா, தனது வீட்டோ பவரை பயன்படுத்தி தள்ளுபடி செய்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் ஹமாஸூக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை களத்தில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக செங்கடலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழியாக பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களை தாக்கி கைப்பற்றுவோம் என்று கூறியிருந்தது. இதன்படி சில கப்பல்களையும் கைப்பற்றியிருந்தது. இந்த செங்கடல் பகுதி வழியாக ஆசிய - ஐரோப்பியத்தின் 12% வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே இதை ஆக்கிரமிப்பது வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.

ஹவுதி அறிவித்தபடி சில கப்பல்களை கைப்பற்றினர். அதேபோல இந்தியா நோக்கி வந்துக்கொண்டிருந்த கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், நேற்று செங்கடலில் பயணித்த சிங்கப்பூருக்கு சொந்தமான மார்ஸ்க் ஹாங்சோ எனும் சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை அமெரிக்க கடற்படையினர் முறியடித்துள்ளனர். வான்வழித் தாக்குதல் மூலம் அமெரிக்க கடற்படையினர், ஹவுதியின் படகை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதில் அந்த படகில் இருந்த 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த செய்தி ஹவுதி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த பதிலடித் தாக்குதல் செங்கடலில் மீண்டும் அமைதியை நிலை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+