உலகிலேயே விலை மதிப்பான விவாகரத்து... மனைவிக்கு ரூ 26,450 கோடி ஜீவனாம்சம் தந்த சுவிஸ் தொழிலதிபர்
பெர்ன்: முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளார் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் ஒருவர். இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து என்ற பெருமையை இவர்களது விவாகரத்து பெற்றுள்ளது.
சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர் ரஷ்ய தொழிலதிபர் டெமிட்ரி ரெய்போலோவ்லிவ் (47). உரத்தொழிலில் செய்து வரும் இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. தற்போது 100 பில்லியன் டலர் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவி எலினாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினார்கள்.

ஜீவனாம்சம்...
இருவரும் ஒருமித்து விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் வழக்கு சுமூகமாக முடிந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனைவி எலினாவுக்கு 4,020,555,987 சுவிஸ் பிராங்க்ஸ் நஷ்ட ஈடாக கொடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 26,450 கோடி சுமார் ஆகும்

ரெண்டு பங்களாக்கள்...
இதுபோக, அமெரிக்காவில் உள்ள டிமிட்ரிக்கு சொந்தமான ஒரு பங்களாவையும், கிரீக் தீவில் உள்ள ஒரு பங்களாவையும் மனைவி எலினாவுக்கு கொடுக்க அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

காசோலையாக...
நீதிபதி தீர்ப்பு அளித்த சில நிமிடங்களிலேயே, தொழிலதிபர் டிமிட்ரி தனது முன்னாள் மனைவிக்கு ரூ 26,450 கோடிக்குமான காசோலையை நீதிமன்ற வளாகத்திலேயே கொடுத்துவிட்டார்.

விலையுயர்ந்த விவாகரத்து...
இதுவரை இவ்வளவு அதிகமான தொகை விவாகத்து வழக்கில் ஜீவனாம்சமாக வழங்கப் படாததால் இதுவே உலகிலேயே விலையுயர்ந்த விவாகத்து என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது. தற்போது விவாகரத்தான டிமிட்ரி, எலினா தம்பதிக்கு 22 வயதில் மகள் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications