இனி கொரோனா கூடவே உட்கார்ந்து ஒரு ஆஃப் அடிக்கலாம்.. தொத்திக்கும்னு பயமே இல்லையே!.. பாரில் புதுமுயற்சி
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பார்களில் வாடிக்கையாளர்கள் கொரோனா அச்சமின்றி குடிக்க ஏதுவாக சிறப்பு ஷீல்டுகளை அமைத்துள்ளனர்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா அச்சம் இருக்கும் போதிலும் தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடைகளில் வாடிக்கையாளர்களை கவர முகக் கவசம், கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகிறார்கள்.
இது போல் செய்யாத கடைகளில் சுகாதாரம் பார்க்காத ஆட்கள் மட்டுமே வந்து செல்கிறார்கள். அதனால் முகக் கவசமும், கிளவுஸும் தற்போது முக்கியமாகியுள்ளது.

கிருமிநாசினி
அது போல் ஹோட்டல்களில் உணவு பரிமாறுபவர்களும் இது போன்று முகக் கவசம், கைகளுக்கு கிளவுஸ் அவ்வப்போது தரைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மதுக்கடைகள், பார்கள் என திறக்கப்பட்டு வருகின்றன.

மதுக்கடைகள்
அது போல் ஜப்பானில் மது கடைகள் ஜூன் கடைசி வாரத்தில்தான் திறக்கப்பட்டன. இங்கு பார்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கிடைக்கும் வாடிக்கையாளர்களை கை நழுவ விடக் கூடாது என்பதற்காக பார் ஊழியர்கள் பல பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கிறார்கள்.

மீன் கப்
பார்களில் உள்ள இருக்கைகளுக்கு மேல் மீன் கப் போன்று பெரிய ஃபைபரால் ஆன இழைகள் உள்ளன. அதன் கீழ் உட்கார்ந்தால் நமது மார்பு வரை அது கவர் ஆகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே எந்த உடல் ரீதியிலான தொடர்பும் இருக்காது. அப்படியிருந்தும் 70 முதல் 80 சதவீதம் வரை மட்டுமே வருமானம் வருவதாக பார் உரிமையாளர்கள் வருந்துகிறார்கள்.

கூம்பு வடிவம்
இதுகுறித்து ஜாஸ் லாஞ்ச் என் கவுன்ட்டர் பாரின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில் கொரோனாவுக்கு முன்பு இருந்த வருமானத்தை மீண்டும் பெறவும் தற்போது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒரு கூம்பு வடிவத்தில் ஒளி புகக் கூடிய ஸ்கிரீன்கள் விட்டத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

தோள் பட்டை
இதன் கீழ் வாடிக்கையாளர்கள் அமர்ந்தால் தலையும் தோள்பட்டையும் மறைக்கும் வரை கவராகும். இது ஒரு வாடிக்கையாளருக்கும் இன்னொரு வாடிக்கையாளருக்கும் இடையே பாதுகாப்பு அரணாக இருக்கும். அது போல் ஊழியர்களுக்கும்தான். இந்த புதிய முயற்சியால் கொரோனா அச்சமின்றி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிவதாக ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள் என்றார்.

பாதுகாப்பு ஸ்கிரீன்கள்
இதுகுறித்து வாடிக்கையாளர் கூறுகையில் இந்த புதிய பாதுகாப்பு ஸ்கிரீன்கள் இல்லாவிட்டால் என்னால் ஊழியருடன் பேசுவதற்கே அச்சமாக இருக்கும். அதாவது அவருடன் பேசினால் எங்கே அவரது வாயிலிருந்து எச்சிலோ, தும்மும் போது மூக்கிலிருந்து நீர் துளிகளோ பட்டுவிடும் என்ற அச்சம் இல்லாமல் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications