ஜெர்மனியில் ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பேர் பலி: 100 பேர் படுகாயம் !

Subscribe to Oneindia Tamil

பவேரியா: ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

ஜெர்மனியில் பவேரியா மாகாணத்தில் இருந்து 60 கி.மீ. தென் கிழக்கே அமைந்துள்ள பேட் அய்பிலிங் நகரில் பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியாகியுள்ளனர், 150க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Train crash in southern Germany, 9 person dead

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீஸாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, முழு வீச்சில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இடுபாடுகளில் மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான விபத்து ஏற்படவில்லை. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+