இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை டிரம்ப்பையே சேரும்: தென் கொரிய அதிபர்
தென் கொரியா மற்றும் வட கொரியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதற்கான பெருமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையே சேரும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் கூறியுள்ளார்.
இதற்கு நன்றிபாராட்ட விரும்புவதாகவும் மூன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை, தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா தன் அணியை அனுப்பும் என்று அறிவிக்க காரணமாக அமைந்தது.
- அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி
- ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்
ஒரு வாரத்திற்கு முன்பு டிரம்ப், இந்த பேச்சுவார்த்தைக்கு தாம்தான் காரணம் என்று ட்வீட் செய்திருந்தார்.
"உறுதியான, வலுவான மற்றும் வட கொரியாவுக்கு எதிராக மொத்த வலிமையையும் காட்ட மனமுவந்து செயல்பட்டதன் மூலம் இந்த பேச்சுவார்த்தை சாத்தியமாகி இருக்கிறது," என்று கூறி இருந்தார்.
புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மூன், "கொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை அனைத்தும் அதிபர் டிரம்ப்பையே சேரும் என்று நினைக்கிறேன்."
அமெரிக்கா முன்னெடுத்த பொருளாதாரத் தடை மற்றும் அவை கொடுத்த அழுத்தங்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.
புதன்கிழமை, வட கொரியாவின் ஒரே ஒரு பிரதிநிதி சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு தலைமையகத்துக்கு வருகை தந்து, 2018 ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கெடுப்பதற்கான ஒப்பந்ததை முறைப்படுத்தினார்.
- ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்
- அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி
தென் கொரிய அதிபர் மூன் கடினமான ராஜதந்திர பாதையில் செல்கிறார். அவர் வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் விரும்புகிறார். அதே நேரம் தனது கூட்டாளியான அமெரிக்காவையும் எரிச்சலூட்டிவிடக் கூடாது, பொருளாதார தடைகளையும் மீறிவிட கூடாது என்று செயல்படுகிறார் என்று சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
கொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம், "கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தையும், உறுதியற்றத் தன்மையையும் இந்த பேச்சுவார்த்தை குறைக்கும்." என்று கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
- ''மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தமிழக மாணவர்
- ஆஃப்கானிஸ்தானில் இந்த போதை மருந்தின் பெயர் மூக்குப்பொடி
- போதை மருந்துக்கு அடிமையான மலைப்பாம்பு!
- தொடர் சூறாவளிகள், உயரும் கடல் மட்டம்... இதுதான் காரணமா?
-
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து














Click it and Unblock the Notifications