புதின் என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்.. சோஷியல் மீடியாவில் புலம்பி தள்ளிய டிரம்ப்!
நியூயார்க்: உக்ரைன்-ரஷ்யா போரை நான் ஆட்சிக்கு வந்தால் நிறுத்துவேன் என டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்காக சில நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால் போர் நிற்கவில்லை. இதனால் டென்ஷனான அவர், புதின் என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார் என புலம்பியுள்ளார்.
போர் நிறுத்த நடவடிக்கைக்காக அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து ரஷ்ய அதிபரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் போர் இதுவரை நிறுத்தப்படாமல் இருப்பது அமெரிக்காவுக்கு டென்ஷனை ஏற்றியிருக்கிறது.

இந்த போருக்கு காரணமே அமெரிக்காதான் என்று சொல்ல முடியும். உக்ரைன் முன்னாள் சோவியத் நாடு. இப்போது சுதந்திர நாடாக இருக்கிறது. நமக்கு பாகிஸ்தானை போல ரஷ்யாவுக்கு உக்ரைன் பக்கத்து நாடு. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில்தான் நேட்டோ உள்ளே நுழைந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் எந்த நாடு இணைந்தாலும், அந்நாட்டு பாதுகாப்புக்கு நேட்டோ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். உக்ரைன் இந்த முயற்சியை மேற்கொண்டபோது அதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆனால் ஜெலன்ஸ்கி கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தார். எனவே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை அறிவித்தது. போர் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் போர் முடிவுக்கு வரவில்லை. இதனை நான் சரி செய்கிறேன் என்று கூறி டிரம்ப் உள்ளே மூக்கை நுழைத்தார். இஷ்டத்திற்கும் ரஷ்யா ஆதரவு செயல்பாட்டில் இறங்கிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உக்ரைன் அதிபரை கூப்பிட்டு வைத்து திட்டினார்.
போர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்த போதுதான் அது தற்போது மூர்க்கமடைந்திருக்கிறது. காரணம் ரஷ்யாவின் தாக்குதல். ரஷ்யா அவ்வளவு எளிதில் இந்த போரை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. எனவே தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்கு டிரம்ப் கண்டனம் முழங்கியிருக்கிறார்.
"பொதுமக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடந்த புதினுக்கு எந்த தேவையும் கிடையாது. இப்போதுதான் வியஷம் தெரிய வருகிறது. இந்த பொரை நிறுத்த புதினுக்கு விரும்பம் இல்லை போல. என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். வங்கி தடை மற்றும் இரண்டாம் நிலை தடை உத்தரவு மூலம்தான் கடைசியில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications