வெளிநாட்டினருக்கு எதிரான டிரம்ப்பின் குடிவரவு மசோதா.. நாடாளுமன்றத்தில் தோல்வி
அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெறுவதற்கும், உயர் பதவி பெறுவதற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட குடிவரவு சீர்திருத்த மசோதா தோல்வியை தழுவி இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெறுவதற்கும், உயர் பதவி பெறுவதற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட குடிவரவு சீர்திருத்த மசோதா தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சட்டம் காரணமாக இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்டம் நிறைவேறாதது மக்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே டிரம்ப் அமெரிக்க நாட்டில் குடியேறி இருக்கும் வெளிநாட்டு மக்களை எப்படியாவது வெளியேற்ற நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் இதில் பெரிய தோல்வியை தழுவுகிறார்.

மசோதா
டிரம்ப் அறிமுகப்படுத்திய இந்த சட்டத்திற்கு ''எல்லை பாதுகாப்பு மற்றும் குடிவரவு சீர்திருத்த சட்டம்'' என்று பெயர் வைக்கலாம். அதன்படி அமெரிக்க நாட்டில் குடியேற வேண்டும் என்றால், மிகவும் அதிகபட்ச திறமை தேவைபடும். அதேபோல் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களை தவிர வேறு யாரும் உயர் பதவியில் சேர முடியாது. இந்த மசோதாவை நேற்று அவர் அவையில் தாக்கல் செய்தார்.

பிரச்சனை
இந்த மசோதாவால் இந்தியர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இப்போது அமெரிக்க நிறுவனங்களில் பெரும்பாலும் இந்தியர்களே உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், அமெரிக்காவில் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நபர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

தோல்வி அடைந்தது
ஆனால் இந்த மசோதா அவையில் தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 121 பேர் வாக்களித்து இருக்கிறார்கள். அதேபோல் இந்த மசோதாவிற்கு எதிராக 301 பேர் வாக்களித்துள்ளனர். இதனால் டிரம்ப் மிகவும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியர்களுக்கு சாதகமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கவில்லை
அமெரிக்க அவையில் டிரம்ப்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எல்லோரும் டிரம்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதே சமயத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த சிலரும் கூட இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்து டிரம்ப்பிற்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications