இந்தியா, பாக். போர் மூளும் அபாயம்…. உலக நாடுகள் கவலை.. நாட்டாமைக்கு தயார் என்கிறது துருக்கி
Recommended Video

அங்காரா: இந்தியா பாக். போர் பதற்றம் தொடர்ந்து கவலை அளிப்பதாகவும், சமரசம் செய்து வைக்க தயார் என்றும் துருக்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. அதன் எதிரொலியாக இன்று காலை இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் எதிர்கொண்டன. அப்போது இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. அந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் 21 ரக விமானம் ஒன்றும், அதில் இருந்த விமானியும் காணாமல் போயினர்.

சென்னை விமானி
சிறிது நேரத்திலேயே... கைது செய்யப்பட்ட இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.அந்த விமானி சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அபிநந்தன் என்பது தெரிய வந்தது. இது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்தியா வெளியிட்டது.

மீட்க நடவடிக்கை
இந்திய விமானியை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. தொடரும் தாக்குதல்களால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள்
விமானி அபிநந்தன் பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து.... உலக நாடுகளும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்களை உற்று நோக்க ஆரம்பித்துள்ளன.

பிரான்ஸ் எச்சரிக்கை
ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளுக்கு தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளை செல்ல வேண்டாம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இரு நாடுகளின் நிலவரங்கள் கவலை அளிப்பதாக துருக்கி கூறியுள்ளது.

கவலை அளிக்கிறது
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிரதமர் மெவ்லட் காவிஸ்லுகு கூறியதாவது:இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே தற்போதைய சூழல் மிகுந்த கவலை அளிக்கிறது.

தீர்வுக்கு தயார்
இந்த பிரச்சனையை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட முடியாது. இருநாடுகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கவும் துருக்கி தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications