சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்
சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது.
ஒய்ஜிபி என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையில் இருக்கும் அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கி வருகின்றது.
தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை விரட்டியதாகக் கூறும் குர்திஷ் குழு, இதற்குப் பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ராக்கெட் ஏவியதாகவும் கூறியுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவ குழு முக்கிய பகுதியாக உள்ளது.
மிக விரைவாக ஒய்ஜிபியை நசுக்கத் துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் உறுதியேடுத்துள்ளார். ஆனால், பொது மக்கள் பலியாவதை தடுக்கத் துருக்கி தனது படைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன், குர்திஷ் ராணுவ குழுவுக்கு தொடர்புள்ளது என துருக்கி நம்புகிறது.
அஃப்ரின் பிராந்தியத்தில் இருந்து குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றும் நோக்கத்துடன் இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
துருக்கியின் படைகளுடன், 'ஃப்ரீ சிரியன் ஆர்மி' என்ற துருக்கி ஆதரவு அமைப்பின் கிளர்ச்சியாளர்களும் இணைந்துகொண்டனர். சிரியாவின் பிராந்தியத்திற்குள் தரை வழியான நுழைந்ததன் முந்தைய நாள், சிரியாவில் வான்வழி தாக்குதலை துருக்கி நடத்தியது.
சுமார் 25,000 ஃப்ரீ சிரியன் ஆர்மியின் போராளிகள், துருக்கி ராணுவத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகத் தளபதி மேஜர் யாசர் அப்துல் ரஹிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால், களகத்தில் எத்தனைத் துருக்கி படையினர் உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை.
தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலின் மூலம் ஞாயிற்றுக்கிழமையன்று 45 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி ராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக குர்திஷ் ராணுவ குழுவின் 153 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி கூறியிருந்தது.
வான்வழித் தாக்குதலால் 11 பொதுமக்கள் இறந்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
இந்த சண்டையில் நான்கு துருக்கி படையினரும், 10 சிரிய கிளர்ச்சியாளர்களும் இறந்ததாக குர்திஷ் ராணுவ குழு கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- ஒரு பெண்ணான நான் இன்னொரு பெண்ணுடன் வாழ ஏன் முடிவு செய்தேன்? #HerChoice
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- ஆப்கானிஸ்தான்: துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்
















Click it and Unblock the Notifications