காட்டுக் கழுதையைக் கொன்று சமைத்துத் தின்ற 2 பேருக்கு சிறை - 9 லட்சம் அபராதம்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில், காட்டுக் கழுதையை கொன்று அதன் கறியை சமைத்துச் சாப்பிட்டதற்காக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு ரூ. 9 லட்சம் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளது.

பனி சேவல், கியாங் எனப்படும் காட்டுக் கழுதை, கிடாமாடு என அழிந்து வரும் அரிய விலங்குகளின் தாயகமாக விளங்குகிறது திபெத். இந்நிலையில் சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள மின்சார நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றனர் சென் மற்றும் லீ என்ற இரண்டு நண்பர்கள்.

Two jailed in Tibet for killing wild donkey

சம்பவத்தன்று இவர்கள் நண்பர்கள் இருவரும் திபெத் காட்டுப் பகுதிக்கு வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது காட்டு கழுதை ஒன்றின் மீது வாகனத்தால் இடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், அதன் இறைச்சியை தனது நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்துள்ளனர்.

கொல்லப்பட்ட காட்டுக் கழுதையின் எலும்புக் கூடோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார் சென். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் இருவரும் திபெத்தின் ஜன்டா கவுன்டியில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மிகவும் அரிய வகை திபெத்திய காட்டுக் கழுதையைக் கொன்ற குற்றத்திற்காக இருவருக்கும் 15,000 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 9 லட்சம் ஆகும்.

மேலும், குற்றத்திற்குக் காரணமான சென்னுக்கு 42 மாதங்கள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த லீ சென்னுக்கு ஒரு வருடமும் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+