வெடிகுண்டு மிரட்டல்: பாரீஸ் வந்த பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்கா, கனடாவுக்கு திருப்பிவிடப்பட்டன
பாரீஸ்: அமெரிக்காவில் இருந்து பாரீஸ் கிளம்பிய இரண்டு பிரான்ஸ் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து திருப்பிவிடப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானம் 65 497 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை பாரீஸுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் திருப்பிவிடப்பட்டு உடா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரில் இரவு 7.30 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் வாஷிங்கடன் நகரில் இருந்து பாரீஸ் கிளம்பிய ஏர் பிரான்ஸ் விமானம் 55ம் பாதுகாப்பு காரணங்களால் கனடாவுக்கு திருப்பிவிடப்பட்டது. அந்த விமானம் கனடாவில் உள்ள ஹாலிபாக்ஸ் விமான நிலையத்தில் இரவு 10.15 மணிக்கு தரையிறங்கியது.
இரண்டு விமானங்களும் கிளம்பிய பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தான் விமானங்களை சோதனையிட உடனே அவை திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரீஸில் 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 129 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம்கள்:
அமெரிக்காவின் மேரிலேண்டில் இருந்து சிகாகோ சென்ற விமானத்தில் ஒரு இஸ்லாமிய பெண் மற்றும் 3 இஸ்லாமிய ஆண்கள் செல்போனில் செய்திகளை பார்த்ததற்காக அவர்கள் மீது சந்தேகப்பட்டு விமானத்தை பால்டிமோர்-வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தினர். அந்த 4 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று தெரிந்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications