விந்தணுவில் பரவும் "கில்லர்" வைரஸ்.. அடுத்தடுத்து 19 பேர் பலி.. அதிர்ந்து போன உலக சுகாதார மையம்!
கம்பாலா: உகாண்டாவில் தற்போது வைரஸ் நோய் தொற்று ஒன்று தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே கடந்த 2 வருடமாக முடக்கி போட்ட கொரோனா வைரஸ் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மனித குலத்தை விட்டு வெளியேற தொடங்கி உள்ளது. இதன் பாதிப்பு அளவு கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் குறைய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில்தான் உகாண்டாவில் தற்போது எபோலா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. ஆப்ரிக்காவில் அடிக்கடி பரவும் இந்த வைரஸ்.. தற்போது உகாண்டாவில் வேகமாக பரவி வருகிறது.

வைரஸ்
எபோலா நோய் என்பது எபோலா வைரஸ் மூலம் பரவும் நோயாகும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 2-3 நாட்களில் அதன் அறிகுறி தெரிய தொடங்கும். பொதுவாக காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். அதேபோல் எபோலா மூலம் பாதிக்கப்பட்டால் வாந்தி எடுப்பது, வயிற்றுப்போக்கு ஏற்படுவது, தோல்களில் சிரங்கு ஏற்படுவது போன்ற பாதிப்புகளும் ஏற்படும். போக போக இதன் அறிகுறிகள் இன்னும் தீவிரம் ஆகும்.

எபோலா
சமயங்களில் இந்த எபோலா காரணமாக சிலருக்கு ரத்த போக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக 25 - 90 சதவிகிதம் பேர் வரை இந்த வைரஸ் காரணமாக பலியாக வாய்ப்புகள் உள்ளன. உடலில் நீர் இழப்பு காரணமாக பொதுவாக இந்த வைரஸ் தாக்கி மரணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. முதல் அறிகுறி ஏற்பட்டு 6 - 15 நாட்களில் மரணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டால் இந்த நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன.

எபோலா நோய்
1976ம் ஆண்டில் காங்கோவில் இந்த வைரஸ் பரவ தொடங்கியது. கடத்தி 20 வருடங்களாக ஆப்ரிக்காவில் இந்த வைரஸ் அடிக்கடி பரவி வருகிறது. மனிதர்களின் ரத்தம், எச்சில், வாந்தி, முத்தம், விந்து அணு ஆகியவை மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் தற்போது உகாண்டாவில் இந்த வைரஸ் தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது. அந்த நாட்டில் தற்போது லாக்டவுன் போடப்பட்டு உள்ளது. இந்த திடீரென பரவல் காரணமாக உலக சுகாதார மையமும் ஆடிப்போய் உள்ளது.

பாதிப்பு
அங்கு 54 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 19 பேர் இந்த வைரஸ் காரணமாக அங்கு பலியாகிவிட்டனர். சூடான் நாட்டு வகை எபோலா வைரஸ் தற்போது அங்கு பரவி வருவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பலர் பாதுகாப்பற்ற முறையில் அங்கு பாலியல் உறவு கொள்வதால், விந்தணு மூலம் அதிக அளவில் அங்கே நோய் பரவி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கு இந்த அறிகுறி ஏற்பட்டுள்ளதால் மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications