ஈரானில் உக்ரைன் விமானம் விபத்து.. புறப்பட்ட சில நிமிடத்தில் சோகம்.. 170 பேர் பலியான கொடூரம்!
ஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரில் 170 பேர் பலியானார்கள்.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 170 பேரும் இதில் பலியானார்கள்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.
சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது. பொதுவாக போயிங் விமானங்களில் நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எப்படி
இதற்கு மத்தியில்தான் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்கிறார்கள். விமானத்தில் பயணித்த 170 பேர் என்ன ஆனார்கள் என்பது குறித்த விவரம் முதலில் வெளியாகவில்லை.

மீட்ப படை
மீட்பு படையினர் விமான விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்ட மீட்பு பணி முடிந்த நிலையில் இந்த விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும், 170 பேரும் பலியானதுஉறுதியாகி உள்ளது.

போர் பதற்றம்
ஈரானில் ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க தளவாடங்களை இன்றுதான் ஈரான் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது. இதற்கு மத்தியில் ஈரானில் விமான விபத்து ஏற்பட்டடுள்ளது.

நிலை
இதனால் ஈரான் அரசு கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. அந்நாட்டு ராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டார். அமெரிக்க படை தாக்குதலால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. இவரின் இறுதி ஊர்வலத்தில் 35 பேர் நெரிசலில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications