For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகள் ஆபாச படம்... உக்ரைன் வலைத்தள நிறுவனருக்கு 30 ஆண்டுகள் சிறை : அமெ. கோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

நியூயார்க்: சிறுவர் - சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை வெளியிட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆபாச வலைத்தள நிறுவனருக்கு அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் படங்களை இணையத்தில் வெளியிடுவதும், அதை பார்வையிடுவதும் குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க, தடை செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனைச் சேர்ந்த மேக்சிம் ஷிங்காரென்க்கோ என்ற வலைதள நிறுவனர் தனது வலைதளத்தில் ஆயிரக்கணக்கான ஆபாச படங்களை வெளியிட்டார்.

அவையனைத்தும் சிறுவர்- சிறுமியரை உடலுறவில் ஈடுபடுத்தி உலகின் பல நாடுகளை சேர்ந்த சுமார் 600 பேர் ஒளிப்பதிவு செய்தது என விசாரணையில் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேக்சிம் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு மேக்சிமை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்போது அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

அதன்படி, அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்ட மேக்சிம் மீது கடந்த 18 மாதங்களாக நியூ ஜெர்சி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

விசாரணையின் முடிவில், செய்த தவறை ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்துவதாக கோர்ட்டில் தெரிவித்தார் மேக்சிம். ஆனபோதும், நீதிபதி அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

English summary
A Ukrainian man who pleaded guilty to starting and operating a hard-core child pornography website for three years was sentenced to 30 years in U.S. prison on Tuesday by a federal judge in New Jersey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X