ரஷ்ய ராணுவ பீரங்கி மீது சிறுநீர் கழித்த உக்ரேனியர்கள்? சமூகவலைதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
கீவ்: உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ டாங்கிகள் மீது உக்ரேனியர்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரிடுவதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது ரஷ்யா.
உக்ரைன் மீது கடல் வழி, தரை வழி, வான்வழி என அனைத்து விதமாகவும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா.

மக்கள் அவதி
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

போர் நிறுத்தம்
அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷியா அறிவித்துள்ளது.

ராணுவ வாகனம்
இரு நாடுகளுக்கு இடையேயான போரில் உக்ரைன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் சில பகுதிகளில் ரஷிய படைகள் தங்கள் ராணுவ வாகனங்களை கைவிட்டுவிட்டு வெளியேறியிருக்கின்றனர். உக்ரைனின் கக்ஹொவா மாகாணத்தில் உள்ள சப்லெஹா நகரில் ரஷியாவின் எம்டி-எல்பு ரக ராணுவ டாங்கியை ரஷிய படையினர் கைவிட்டு சென்றனர். இதனால், அந்த ராணுவ டாங்கி அங்கு சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

சிறுநீர் கழித்தனர்
சப்லெஹா பகுதியில் வசித்து வந்த உக்ரைனியர்கள், கைவிடப்பட்ட ரஷிய ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழித்துள்ளனர். அதை சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். உக்ரைனியர்கள் ரஷிய ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழிக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த ரஷிய ராணுவ டாங்கி மீது உக்ரைன் கொடியையும் அவர்கள் ஏற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications