அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பார்: பான் கி மூன் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடி இந்த ஆண்டு நடக்கும் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்று தான்

நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பாங் கி மூன் தெரிவித்துள்ளார்.

ஜ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபனீ டுஜாரிக் கூறுகையில்,

UN Chief Hopes Narendra Modi attends UN General Assembly; Climate Change Summit

நரேந்திர மோடி ஜ.நா. சபைக்கு வருவார் என்று நம்புகிறோம். அதிலும் குறிப்பாக அவர் வானிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்

என்று நம்புகிறோம். வானிலை மாற்றம் குறித்த விஷயத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடக்கும் மாநாட்டில் அவரை சந்திப்போம் என்று நம்புகிறோம். பான் கி மூன் மோடி வெற்றி பெற்ற பிறகு அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மோடியை ஐ.நா. சபைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் என்றார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்தார். குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக விசா வழங்க மறுத்து வரும் நிலையில் ஒபாமாவும், பான் கி மூனும் அமெரிக்கா வருமாறு அவரை அழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+