இலங்கை இனப்படுகொலை.. சர்வதேச நீதிபதிகள் விசாரிக்க ஐநா பரிந்துரை
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டது. அதில் சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டது. அதில் சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் மே மாதம் உச்சக்கட்டப் போர் நடந்தது. இதில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2011-ம் ஆண்டில் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. நிபுணர்கள் குழுவும் இந்த படுகொலைகளை உறுதிப்படுத்தியது.

இதையடுத்து இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா. சார்பில் விசாரணை குழு ஒன்று 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு அப்போதைய அதிபர் ராஜபக்சே அனுமதி மறுத்தார். இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு புதிய அதிபர் சிறிசேனா அனுமதித்தார்.
இதன்பின்னர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் மீட்க வேண்டும். பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பாலியல் கொடுமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications