கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சம்.. அமெரிக்காவில் பெரும் நோய் பேரழிவு! மறு பக்கம் என்ன நடக்கிறது பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும், இதைப் பொருட்படுத்தாமல், நாட்டின் அனைத்து 50 மாகாணங்களும் லாக்டவுனை தளர்த்தியுள்ளன.
Recommended Video
தடுப்பூசி தயாரிக்கப்படாவிட்டால் நாட்டில் 50 முதல் 60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அந்த நிலை ஏற்பட்டால், அமெரிக்காவில், இறப்புகளின் எண்ணிக்கை 2024 க்குள் 14 லட்சத்தை எட்டும்.
அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி நியூயார்க். அங்கு நாட்டின் மொத்த கேஸ்களில் 22 சதவீதம் பதிவாகியுள்ளன. சுமார் 30,000 பேர் இறந்துள்ளனர்.

நியூயார்க்
நியூயார்க்கில்தான், ஐக்கிய நாடுகள் சபை, உலகெங்கிலும் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. நியூயார்க், நியூ ஜெர்சி, கலிபோர்னியா, மற்றும் இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் ஆகிய ஐந்து மாகாணங்களில், கொரோனாவல் 55,000 பேர் பலியாகியுள்ளனர்.

முந்தைய பேரழிவுகள்
இரண்டு மாத கடுமையான லாக்டவுன் இருந்தபோதிலும், அமெரிக்காவில் இறப்புகள் 100,000த்தை எட்டியுள்ளன. முன்னதாக 1957இல், ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் ஃப்ளூ காய்ச்சலால் கொல்லப்பட்டனர், 1968 இல் இதேபோன்ற காய்ச்சலால், அமெரிக்காவில், ஒரு லட்சம் பேர் இறந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை விரைவில் அங்கு தாண்டப்படும் போல தெரிகிறது.

முதலாம் உலகப்போர்
முதலாம் உலகப் போரின்போது, காய்ச்சலால் 6 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிர் இழந்தனர். அதுதான் அந்த நாடு கண்ட பெரும் நோய் பரவல் பாதிப்பு. இப்போது, கொரோனா அந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துவிடும் வாய்ப்பு உள்ளது.

மறுபக்கம் ஜாலி
அதே நேரத்தில், இறப்பு மற்றும் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதைப் பொருட்படுத்தாமல், அமெரிக்கர்கள் கடற்கரைகளில் சூரிய குளியலில் ஈடுபடுவதையும், படகுகளில் மீன்பிடித்தல் மற்றும் நீச்சல் அடிப்பதையும் காண முடிகிறது. புளோரிடா, நியூயார்க் மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.

நீச்சல் குளம்
மக்கள் குளங்கள் மற்றும் கிளப்புகளில் விருந்து நடத்தும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. அமெரிக்க போரில் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவேந்தலை நினைவுகூரும் வகையிலான நினைவு நாளிலும் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனர்.

உலக நிலவரம்
அதேநேரம், உலகம் முழுக்க கொரோனாவுக்கு 5,588,020 பேர் பாதிப்படைந்துள்ளனர். உலகம் முழுக்க கொரோனா பலி எண்ணிக்கை 347,872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 2,365,703 பேர் மீண்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,805 என்ற அளவில் உள்ளது.
-
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications