அமெரிக்கா போட்ட 5,000 குண்டுகள் – எல்லாமே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கவாம்!
வாஷிங்டன்: ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை வளைத்து வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது இதுவரை 5000க்கும் மேலான குண்டுகளை வீசியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. அனைத்தும் விமானத் தாக்குதலாகும்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்கள் இவை. இதில் 3000க்கும் மேற்பட்ட இலக்குகள் தீவிரவாதிகளின் டாங்குகள் என்று பென்டகன் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்களில் எதிரிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா தனது தாக்குதலை தொடங்கியது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான தாக்குதலையே நடத்தியது. ஆனால் போகப் போக அது வி்ரிவடைந்தது. மேலும் பல நாடுகளும் அமெரிக்காவுடன் கை கோர்த்தன. அனைவரும் சேர்ந்து விமானத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதுவரை தீவிரவாதிகளின் 58 டாங்குகள், 184 கவச வாகனங்கள், 303 பிக்கப் லாரிகள், 26 ஆயுத வாகனங்கள், 394 பிற வாகனங்களை அழித்துள்ளதாக பென்டகன் கணக்கு காட்டியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையாகும். அமெரிக்க ராணுவம் முன்பு பயன்படுத்தி வந்தவையாகும். ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் கிளம்பிச் சென்றபோது விட்டு விட்டுப் போனவையாகும்.
இந்தத் தாக்குதலில் எந்தெந்த இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன என்ற விவரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. அதேசமயம், எதிரிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டும் அது கூறியுள்ளது.
மேலும் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் எவ்வளவு வாகனங்கள், ஆயுதங்கள் இருக்கின்றன என்ற விவரத்தைுயம் பென்டகன் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் சேர்ந்து இதுவரை 1676 முறை விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேலும் கூட்டுப் படை போர் விமானங்கள் மொத்தமாக 15,465 முறை பறந்துள்ளனவாம்.
-
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications