“எங்கள் வலியை பாக்.ராணுவத்தினர் உணரவே அவர்கள் குழந்தைகள் மீது தாக்குதல் ” – தாலிபான்கள்
பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவரில் தாலிபான்கள் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதலுக்கு அவர்கள் "எங்களுடைய வலியை ராணுவத்தினரும் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்குள் சில பயங்கரவாதிகள் அதிரடியாக நுழைந்து பள்ளிச் சிறார்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள், ராணுவ வீரர் உட்பட 120க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான்கள் பொறுப்பேற்பதாகவும் அறிவித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து கூறியுள்ள தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள், "நாங்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். ராணுவத்தினர் ஒவ்வொரு முறையும் எங்களுடைய குடும்பத்தினைரை கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கினார்கள். அந்த வலியை அவர்களும் உணர வேண்டும் என்றுதான் அவர்களின் குழந்தைகளும் படிக்கும் பள்ளியின் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கஃபே ஒன்றில் நேற்று பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த சம்பவம் அடங்குவதற்குள் இன்று பாகிஸ்தானில் அதே போன்றதொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications