"வாக்னர்" கூலிப்படை சீனாவுக்கு பாடம்? புதின் கூட மிரண்டுபோனாரே.. அப்போ ஜி ஜின்பிங் என்ன செய்வார்
பெய்ஜிங்: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக வாக்னர் குழு புரட்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் இருந்து சீனா என்ன மாதிரியான பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
ஒரு பக்கம் உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சீனா ரஷ்யா மற்றும் புதின் உடன் ஒரு சமநிலையைக் கையாண்டு வருகிறது. ரஷ்யாவில் உறுதியற்ற சூழல் உருவாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த வாரம் ரஷ்யாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்பது சீனாவுக்கு இப்போது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சீனா மற்றும் ரஷ்யா உறவு வல்லுநரான ஜோசப் டோரிஜியன் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
என்ன நிலை: ரஷ்ய நிகழ்வுகள் குறித்து சீனா என்ன நினைக்கும் என்பது குறித்து ஜோசப் டோரிஜியன் கூறுகையில், "சீனா உண்மையில் என்ன நினைக்கிறது என்பதை யூகிப்பது கடினம்.. இந்த விவகாரத்தில் சீனா அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. இதனால் சீனாவின் நிலைப்பாடு என்ன என உறுதியாக நம்மால் சொல்ல முடியாது. வரலாற்று ரீதியாகச் சீனா ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை ரஷ்யா கூர்ந்து கவனிக்கும்.
இருப்பினும், சீனா ஊடகங்கள் அந்நாட்டின் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வெளிப்படையாக எந்தவொரு தகவலும் நமக்கு இல்லை. அதேநேரம் சீனா இந்த விவகாரத்தில் கவலை கொள்ளவில்லை என உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் மறைமுகமாக அவர்கள் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். சீனாவின் குளோபல் டைம்ஸ் வாக்னர் கிளர்ச்சி குறித்து சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
சீனா என்ன நினைக்கிறது: சீனாவின் அரசியல் விமர்சகர் ஹு ஜிஜின் தனது ட்விட்டரில், ரஷ்யாவின் ஆயுத கிளர்ச்சி, அங்கிருந்த அரசியல் சூழல் கையை மீறிச் செல்வதைக் காட்டுகிறது. இந்த கிளர்ச்சி எப்படி முடிந்தாலும் ரஷ்யா மீண்டும் பழைய நிலைக்குச் செல்லாது" என்று பதிவிட்டிருந்தார். இருப்பினும், அதைக் கொஞ்ச நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். ரஷ்யா சொந்த நாட்டில் அமைதியைக் கொண்டு வர வேண்டும் என்பதைச் சீனா விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது..
அதேநேரம் தற்போதைய சூழலில் ரஷ்யாவைக் கட்டுக்குள் வைத்திருக்க புதின் தான் சரியான நபராக இருப்பார் எனச் சீனா கருதுகிறது. இதனால் அவர்கள் இன்னுமே புதினுக்கு ஆதரவாகவே உள்ளனர் சில சீன ஊடகங்கள் புதின் வாக்னர் புரட்சியை வெற்றிகரமாகக் கையாண்டார் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளது. வாக்னர் குழு நடவடிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும் கூட இன்னும் பல மேற்குலக நாடுகளும் புதின் தான் சரியான நபர் என்றே கருதுகிறது.
ஒற்றுமை இருக்கிறது: வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை வைத்து சீனா தங்கள் சொந்த நாடு குறித்த முடிவுகளை எடுக்கிறது என்று சொல்ல முடியாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பு, கலாச்சாரப் புரட்சி, 1970களின் பிற்பகுதியிலிருந்து பொருளாதார சீர்திருத்தங்கள், இன சிறுபான்மையினருக்கான கொள்கை என சில ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால், ரஷ்யாவில் இருந்தே சீனா இதை எடுத்தது என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.
ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் பழமைவாதிகள் தான். இருவரும் எப்போதும் மேற்குலக நாடுகளைச் சந்தேகத்துடனேயே அணுகுவார்கள். குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களுடன் தான் நல்ல உறவை வைத்துள்ளனர். அதேநேரம் சீன அதிபர் ஜிங்பிங் ஊழலை ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். ரஷ்யாவில் இதற்கு நேர்மாறான சூழல் இருக்கிறது.
சீனாவில் ராணுவ புரட்சி: மேலும், சீன ராணுவம் முழுக்க முழுக்க அந்நாட்டின் அதிபர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களின் அனுமதி இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, சீனாவில் வாக்னர் புரட்சி போன்ற ஒன்று நடக்கும் வாய்ப்பு மிக மிகக் கடினம். அதேநேரம் சற்று எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications