உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?
தெஹ்ரான்: மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது முடங்கினால் சர்வதேச அளவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இது ஒரு பக்கம் இருக்க சர்வதேச அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து எப்படி நடக்கிறது. சத்தமின்றி திரைமறைவில் இயங்கும் நிழல் கப்பல்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
உலகெங்கும் சுமார் 1,100 நிழல் கப்பல்கள் இயங்குவதாக கடல்சார் புலனாய்வு நிறுவனமான விண்ட்வார்டு தெரிவித்துள்ளது.. கச்சா எண்ணெய் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் மொத்த டேங்கர்களில் இது 17-18 சதவீதம் ஆகும். அதாவது இப்போது இங்கும் கச்சா எண்ணெய் கப்பல்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒன்று இதுபோன்ற நிழல் கப்பல் (Shadow Fleet) கப்பலாகும்.

நிழல் கப்பல்கள்
இந்த நவீன ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் ரோட்டில் எல்லாமே கண்காணிக்கப்படும். போலீசார் நினைத்தால்.. விதிகளைக் கடுமையாக்கினால் பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆனால், கடல்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அந்தளவுக்குக் கண்டிப்பானது அல்ல.. பெரும்பாலும் விதிகளை நாம் விருப்பப்பட்டால் மட்டுமே பின்பற்றுவோம். இதுவே "நிழல் கப்பல்கள்" கப்பல்கள் பெருக முக்கிய காரணமாகிறது.
ஒரு கப்பலின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர்களில் (Global Positioning System Locator) தங்கள் கப்பல் எங்கே இருக்கிறது, கப்பலின் அடையாளம், வேகம், இருப்பிடம், அடுத்த துறைமுகம் எங்கே என்பதைக் கப்பல் ஊழியர்கள் தான் டைப் செய்வார்கள். டிரான்ஸ்பாண்டர்களை நிச்சயம் வைக்க வேண்டும் எனக் கடலில் உயிர் பாதுகாப்பிற்கான சர்வதேச மாநாடு விதிகளில் தெரிவிக்கப்பட்டாலும், அதை ஆஃப் செய்ய வழிமுறை இல்லை. ஒரு முறை அந்த டிரான்ஸ்பாண்டர்கள் ஆஃப் செய்யப்பட்டால் அது கப்பல் வரைபடத்திலிருந்து மறைந்துவிடும். எங்கு இருக்கிறது என்றே தெரியாது.
கப்பலும் கொடியும்
அதேபோல பல சமயங்களில் கப்பல்கள் மீது கொடிகளை நாம் பார்த்து இருப்போம். அந்த கப்பல் அந்த நாட்டின் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றே நாம் நினைப்போம். ஆனால், அது அந்தளவுக்கு எளிமையானது இல்லை. ஒரு கப்பலில் இருக்கும் கொடிக்கும் அது எந்த நாட்டில் ஆபரேட் செய்கிறது என்பதற்கும் தொடர்பு இல்லை. கப்பல் பதிவு என்பது வெறும் பேப்பரில் மட்டுமே இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் கடுமையான விதிகளில் இருந்து எஸ்கேப் ஆக சம்பந்தமே இல்லாத நாடுகளில் தங்கள் கப்பலைப் பதிவு செய்து கொள்ளும்.
உதாரணமாகத் துபாயில் ஷெல் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் கேமரூன், பலாவ், லைபீரியா அல்லது மங்கோலியா போன்ற நாடுகளில் பதிவு செய்து கொண்டு, ஆபரேட் செய்யும். பெரியளவில் எந்த நாடுகளில் கட்டுப்பாடு இருக்காதோ அந்த நாடுகளில் கப்பல்களை இயக்கவே பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பும். ஒருவேளை விசாரணை சிக்கலில் மாட்டினாலும் கூட ஆன்லைனிலேயே வேறு நாட்டின் கீழ் பதிவு செய்ய முடியும்.
எப்படி செயல்படும்
அதாவது அமெரிக்காவில் கப்பலுக்கான ரூல்ஸ் அதிகம். இதனால் அமெரிக்க நிறுவனம் ஷெல் நிறுவனம் மூலம் கேமரூன் நாட்டின் கீழ் பதிவு செய்து கப்பலை இயக்கலாம். கேமரூனில் பெரியளவு ரூல்ஸ் இருக்காது. அதையும் தாண்டி எதாவது மேட்டரில் சிக்கி, கேமரூன் அரசு விசாரணையைத் தொடங்கினால், சட்டென கேமரூனில் இருந்து மங்கோலியா நாட்டிற்கு மாற்றிக் கொள்வார்கள். அப்படி மாற்றினால், அந்த கப்பலை கேமரூன் அதிகாரிகளால் விசாரிக்க முடியாது. இதுபோன்ற ரூல்ஸ்களே சட்டவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.
இன்சூரன்ஸ் ஆவணங்கள்
அதேபோல பெரிய துறைமுகங்களில் நுழைய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்படும். இதுபோல ஷெல் நிறுவனம் மூலம் இயங்கும் கப்பல்கள் 'அடையாளம் தெரியாத' அல்லது போலி காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இதுபோன்ற பேப்பரை ரெடி செய்து கொடுக்கும். இப்படி கப்பல் போக்குவரத்தில் பல குளறுபடிகள் இருக்கிறது. இது உலக நாடுகளுக்குத் தெரிந்தாலும் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.
நிழல் கப்பல்கள் தேவை
இந்தளவுக்கு சிக்கலான ஒரு சிஸ்டம் சிறப்பாகச் செயல்பட ஒரு முக்கிய பொருளாதாரக் காரணமும் உண்டு. வழக்கமான சூழல்களில் அனைத்து ரூல்ஸ்களையும் பின்பற்றுவதே செலவைக் குறைக்கும். ஆனால், உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் வரும்போது ஆட்டம் மொத்தமாக மாறிவிடும். உதாரணமாக, ஈரான் விவகாரத்தில்.. அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு முக்கிய நிறுவனங்களும் ஈரான் கச்சா எண்ணெயை சப்ளை செய்யாது. ஆனால், இந்த நிழல் கப்பல்கள் அதை சப்ளை செய்யும். இப்போதும் கூட ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஏகப்பட்ட நிழல் கப்பல்கள் இருக்கவே செய்கிறது.
-
"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கிறோம்.." ஈரான் அறிவிப்பு.. ஓவர்நைட்டில் முடிவுக்கு வந்த வளைகுடா போர் -
ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம்.. பாகிஸ்தானை நம்ப முடியாது! ஓபனாக சொன்ன இஸ்ரேல் -
"நோ என்ட்ரி".. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்.. இஸ்ரேலால் மீண்டும் பதற்றம்.. என்ன நடந்தது? -
டிரம்ப்பை மதிக்காத இஸ்ரேல்? போரை நிறுத்துவதாக அமெரிக்கா சொல்லிய பிறகும் ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு -
அடிசக்க.. பிட்காயின் விலை 72000 டாலர்.. ஈரான் போர் நிறுத்தம் எப்படி வேலை செய்யுது பாருங்க! -
மெல்ல குறையும் பதற்றம்.. சவுதியில் திரும்பும் அமைதி! ஈரான் முன்னெடுத்த முக்கிய மூவ்! -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
ஈரான் உச்சகட்ட வார்னிங்.. ஹார்முஸ் முழுக்க கண்ணிவெடி வச்சிருக்கோம்.. அந்த பக்கம் போகாதீங்க! -
வெடித்தது பூகம்பம்.. ஈரான் அடுக்கிய 3 மெகா குற்றச்சாட்டு.. அமெரிக்காவின் அடுத்த ஆக்ஷன் என்ன? -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
டிரம்ப்-ன் அடுத்த டார்கெட்.. மீண்டும் கிரீன்லாந்து.. NATO நாடுகளை மிரட்டும் அமெரிக்கா! -
திருப்பூர் டூ நொய்டா.. சொல்லிவச்ச மாதிரி நடக்குதே..!












Click it and Unblock the Notifications